ஆப்நகரம்

டாகுமெண்ட் கேட்ட எஸ்.ஐ சஸ்பெண்ட்; பெண் எஸ்.பி அசத்தல் நடவடிக்கை!

இறந்த மூதாட்டியின் பிரேத பரிசோதனை சான்றிதழை வழங்காமல் இழுத்தடித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி சண்முகபிரியா உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் காவல் துறையினர் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 10 May 2021, 9:35 am
காஞ்சிபுரம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தா (54). இவரது மகன் தான்தோன்றி. கடந்த சில தினங்களுக்கு முன்பாக வசந்தா வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக வசந்தா மீது மோதியது.
Samayam Tamil பாலுச்செட்டி சத்திரம் காவல் நிலையம்
பாலுச்செட்டி சத்திரம் காவல் நிலையம்


இதில் பலத்த காயம் அடைந்த வசந்தாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வசந்தா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாலுசெட்டி சத்திரம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வசந்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்வதற்கான சான்றிதழை அவரது மகன் தான்தோன்றிக்கு 4 நாட்களுக்கு மேலாக வழங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

கொரோனாவுக்கு பலி அதிகரிப்பு; ஆஸ்பத்திரியில் அமைச்சர் விசிட்!

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கு வசந்தாவின் மகன் தாந்தோன்றி கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபுவை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி சண்முகபிரியா உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் காவல் துறையினர் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி