சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் இன்று நீர் திறந்துவிடப்படுகிறது.
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு-கங்கை திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் தமிழகத்திற்கு இரு தவணைகளாக 12 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் ஜூலை முதல் அக்டோபர் வரையில் 8 டி.எம்.சி நீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி நீரும் வழங்கப்பட வேண்டும்..
அதன்படி ஜூலை-அக்டோபர் மாதத்தவணையில், தமிழகத்திற்கு உடனடியாக 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று ஆந்திர அரசு உறுதியளித்தது. ஆனால் அணையில் போதிய அளவு மழை இல்லாததால் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருப்பு குறைந்ததால், வீராணத்தில் இருந்து கொண்டுவரப்படும் நீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் இன்று திறக்கப்படுகிறது.
அணையின் நீர்வரத்தைப் பொறுத்து கூடுதலாகவும் தண்ணீர் திறக்கப்படலாம் என்று ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தன
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு-கங்கை திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் தமிழகத்திற்கு இரு தவணைகளாக 12 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் ஜூலை முதல் அக்டோபர் வரையில் 8 டி.எம்.சி நீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி நீரும் வழங்கப்பட வேண்டும்..
அதன்படி ஜூலை-அக்டோபர் மாதத்தவணையில், தமிழகத்திற்கு உடனடியாக 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று ஆந்திர அரசு உறுதியளித்தது. ஆனால் அணையில் போதிய அளவு மழை இல்லாததால் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருப்பு குறைந்ததால், வீராணத்தில் இருந்து கொண்டுவரப்படும் நீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் இன்று திறக்கப்படுகிறது.
அணையின் நீர்வரத்தைப் பொறுத்து கூடுதலாகவும் தண்ணீர் திறக்கப்படலாம் என்று ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தன