ஆப்நகரம்

காணும் பொங்கல்: மெரினாவில் பொங்கி வழிந்த மக்கள் கூட்டம்

காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா உள்பட பல இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Samayam Tamil 16 Jan 2018, 3:04 pm
காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா உள்பட பல இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
Samayam Tamil kanum pongal lot of people gathered in marina beach
காணும் பொங்கல்: மெரினாவில் பொங்கி வழிந்த மக்கள் கூட்டம்


பொங்கலின் மூன்றாவது நாளான காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் மெரினாவில் பொது மக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.அண்ணா சாலை தொடங்கி பட்டினப்பாக்கம் வரை பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்களை கண்காணிக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 இடங்களில் கண்கானிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் பொதுமக்களை தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.

ஊழைப்பாளர் சிலைக்கு அருகில் 2 இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பந்தலில் இருந்து காவல்துறையினர் உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டே இருப்பார்கள் .

மேலும் கிண்டி சிறுவர் பூங்காவில் காலையில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதியது. வண்டலூர் உயிரியல் பூங்கா காலையில் ஒரு மணிநேரத்திற்கு முன்பே திறக்கப்பட்டது. மேலும் மக்களின் வசதிக்காக 30 சிறப்பு டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டன.

அடுத்த செய்தி