ஆப்நகரம்

சென்னை நீதிபதிகள் வருந்த வேண்டும்: கபில் சிபல் விமர்சனம்

நீதிபதிகள் வழக்குகள் தேங்கியிருப்பது குறித்தும் வருந்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 4 Sep 2018, 12:46 pm
நீதிபதிகள் வழக்குகள் தேங்கியிருப்பது குறித்தும் வருந்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சித்துள்ளார்.
Samayam Tamil kapil-sibal1-22-1503404818


தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டண நிலுவைத் தொகையைச் செலுத்துவது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில், பணியில் உள்ள நீதிபதிகள் முதலான விஐபிகளின் வாகனங்கள் தடையின்றிச் செல்ல தனி வழித்தடங்களை அமைக்க வேண்டும். என உத்தரவிடப்பட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் அனைத்து சுங்கச்சாவடிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்து வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர், “15 நிமிடங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதற்கு வருந்தும் நீதிபதிகள், நீதிமன்றங்களில் ஏராளான வழக்குகள் தேக்கமடைந்திருப்பதை நினைத்தும் வருந்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்