ஆப்நகரம்

காசிமேட்டில் கலவரம்; போலீஸ் தடியடி; பதற வைக்கும் புகைப்படங்கள்

அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய சென்னை காசிமேடு மீனவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 23 Oct 2017, 1:32 pm
அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய சென்னை காசிமேடு மீனவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil kasimedu fisherman protest against minister jayakumar
காசிமேட்டில் கலவரம்; போலீஸ் தடியடி; பதற வைக்கும் புகைப்படங்கள்



மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் அதிவேக இன்ஜின் மோட்டாரைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக சென்னை காசிமேடு மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காததால், இன்று காலை அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக, காசிமேடு மீனவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீனவர்கள் மீது சராமாரியாக தடியடி நடத்தி, ஆர்ப்பாட்டத்தை கலைத்தனர். இதில் பல மீனவர்கள் பலமாக தாக்கப்பட்டனர்.

மீனவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி