ஆப்நகரம்

சென்னை- எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு!

சென்னை எழும்பூர்- எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Samayam Tamil 20 Aug 2018, 5:21 pm
திருச்சி: சென்னை எழும்பூர்- எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Samayam Tamil 3


கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. ஆயிரகணக்கான வீடுகள் நீரில் மூழ்கி, ஏராளமான மக்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்ட பல மாநிலங்களும் முன்வந்துள்ளன. தமிழக முதல்வர் பழனிசாமி 5 கோடியும். புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி ஒரு கோடி ரூபாய் நிதியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

கேரளா செல்லும் பல ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை எழும்பூர்- எர்ணாகுளம் இடையே மதுரை வழியாக இன்று சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரில் இருந்து இன்று மாலை 6.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாளை மதியம் 2 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வல்லியூர், நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், கொல்லம், கயம்குளம், ஹரியாபாத், அம்பாலபுழா, ஆழப்புழா, சேர்தலா ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்