ஆப்நகரம்

சார்ஜ் போட்டுக் கொண்டே போன் பேசிய சிறுவன் பலி!

சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போனை பயன்படுத்தக் கூடாது என நமக்குப் பலர் அறிவுரைக் கூறினாலும் அதையெல்லாம் நாம் கேட்பதாகவில்லை, இந்த அலட்சியப் போக்கு காரணமாக இப்போது சிறுவர் ஒருவர் தனது உயிரை இழந்துள்ளார்.

Samayam Tamil 28 Oct 2020, 5:15 pm
சென்னை கொடுங்கையூர் பகுதியில் செல்போனிற்கு சார்ஜ் போட்டுக் கொண்டே போன் பேசிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாகத் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil சார்ஜ் போட்டுக் கொண்டே போன் பேசிய சிறுவன் பலி!
சார்ஜ் போட்டுக் கொண்டே போன் பேசிய சிறுவன் பலி!


பெரம்பலூர் மாவட்டம் அம்மா பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முக ராஜன். இவர் மகன் சஞ்சய். வயது 17. சஞ்சய் சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள தனது உறவினர் பிரகாஷ் வீட்டில் தங்கியிருக்கிறார்.

சஞ்சய் அதே பகுதியில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்த சூழலில் செவ்வாய்க்கிழமை காலை பணிக்குக் கிளம்பிய சஞ்சய் தனது செல்போனை சார்ஜில் மாட்டிவிட்டுக் குளிக்கச் சென்றுள்ளார்.

குளித்துக் கொண்டிருக்கும்போது சஞ்சய் செல்போனிற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதையடுத்து ஈரத்தோடு செல்போனை எடுத்து சார்ஜ் போட்ட கையோடு குறிப்பிட்ட அழைப்புக்குப் பதில் அளித்துள்ளார்.

அப்போது சஞ்சய் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதன் காரணமாக சஞ்சய் தூக்கி வீசப்பட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சஞ்சய் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அந்த சிறுவர் அசைவற்று கீழே விழுந்து கிடந்துள்ளார்.

சென்னை: ஆட்டோ ஓட்டுனர்கள் அலட்சியம், மின்சாரம் தாக்கி பலியான கர்ப்பிணி பசு..!

இதையடுத்து உடனடியாக சஞ்சய் உடலை மீட்ட அப்பகுதி மக்கள், சிகிச்சைக்காக அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சஞ்சய் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் முன்னதாகவே அந்த சிறுவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உடலைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள், அங்கிருந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் சஞ்சய் சொந்த ஊரான பெரம்பலூருக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். எனினும் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று சஞ்சய் உடலைக் கைப்பற்றிய கொடுங்கையூர் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கொடுங்கையூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி