ஆப்நகரம்

சென்னையில் இருந்து கொல்கத்தா பறக்கும் அனகோண்டா

சென்னை உயிரியல் பூங்காவிலிருந்து கொல்கத்தாவுக்கு மஞ்சள் அனகோண்டா பாம்புகள் கொண்டுசெல்லப்பட உள்ளன.

Samayam Tamil 6 Aug 2018, 8:30 pm
சென்னை உயிரியல் பூங்காவிலிருந்து கொல்கத்தாவுக்கு மஞ்சள் அனகோண்டா பாம்புகள் கொண்டுசெல்லப்பட உள்ளன.
Samayam Tamil pic


கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் உயிரியல் பூங்கா மிகவும் புகழ்பெற்றது. இங்கு அனகோண்டா பாம்புகளை காட்சிப்படுத்த பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக அங்கு செயற்கையாக மழைக்காடுகள் உருவாக்கப்படுகின்றன.

சுமார் 5 அடி உயர மரங்கள் அடர்ந்த செயற்கை மழைக்காட்டில் வளர்க்கப்பட இருக்கும் அனகோண்டாக்களுக்கு மீன்களும் கோழிக்கறியும் உணவுவாக வழங்கப்பட உள்ளன.

தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் அதிகம் வாழும் இந்த அனகோண்டா பாம்புகள் சென்னை உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன. அவற்றிலிருந்து சில கொல்கத்தாவுக்கு எடுத்துவந்து காட்சிப்படுத்தப்பட உள்ளன.

துர்கா பூஜை பண்டிகைக்குப்பின் இந்தப் பாம்புகளை அலிப்பூர் உயிரியல் பூங்காவில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி