ஆப்நகரம்

சென்னை: நவம்பர் 1ஆம் தேதி கோயம்பேடு பழச்சந்தை திறப்பு?

தொழிலாளர்கைன் கோரிக்கையை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

Samayam Tamil 22 Oct 2020, 10:59 am
சென்னை: கோயம்பேடு பழச்சந்தை நவம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil koyambedu fruit market


கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கோயம்பேடு சந்தை பூட்டப்பட்டு இருந்தது. இதன் உள்ளடக்கமான மூன்று சந்தைகளும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு இயங்கி வந்தன. காய்கறிச் சந்தை திருவான்மியூருக்கும், பூ மார்க்கெட் திருமழிசைக்கும், பழச்சந்தை மாதவரத்துக்கும் மாற்றப்பட்டுத் தற்காலிகமாக இயங்கி வந்தன.

இந்நிலையில், காய்கறிச்சந்தையை கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் திறந்தது அரசு. இதனையடுத்து தற்போது பழச்சந்தையை மீண்டும் கோயம்பேட்டில் இயங்க அனுமதி அளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்லாரி ஓகே... அப்போ சம்பார் வெங்காயம்? தலைதூக்கும் அடுத்த பிரச்சினை

தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளின் தொடர் கோரிக்கையின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்னும் சில தினங்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி