ஆப்நகரம்

மழையால் தளும்பும் சென்னை ஏரிகள், மீண்டும் வெள்ளமா?

தொடர் மழை, ஆந்திராவிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி என அனைத்துப் பக்கமிருந்தும் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் ஏரிகள் அனைத்தும் வேகமாக முழுக் கொள்ளவை எட்டி வருகின்றன...

Samayam Tamil 29 Oct 2020, 3:56 pm
சென்னையில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் தொடர் மழைக்கு நடுவே வடகிழக்குப் பருவ மழை நேற்று முதல் தொடங்கியுள்ளது.
Samayam Tamil நிறைந்தது சென்னை ஏரிகள், மீண்டும் வெள்ள அபாயமா..?
நிறைந்தது சென்னை ஏரிகள், மீண்டும் வெள்ள அபாயமா..?


அதேவேளை ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு நீர் வரத்தும் அதிகரித்துக் காணப்படுகிறது. நாலாபக்கமுமிருந்தும் நீர் வருவதால் சென்னையை சுற்றியுள்ள பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரபாக்கம் ஏரிகளில் நீர் முழுக் கொள்ளவை எட்டியுள்ளது.

புதன்கிழமை இரவு நிலவரப்படி செம்பரபாக்கம் ஏரியில் 5 ஆயிரத்து 808 மில்லயன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதன் முழுக் கொள்ளவு 11 ஆயிரத்து 257 கன அடி ஆகும். தொடர் மழைக் காரணமாக இந்த ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி முதல் கிருஷ்ணா நதியிலிருந்து தொடர்ந்து நீர் வரத்து இருந்து வருகிறது. இதையடுத்து பூண்டி ஏரி முழுக் கொள்ளவை எட்டியுள்ளது. இதன் காரணமாகக் கிருஷ்ணா நதியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

கனமழை நிற்காமல் தொடரும் என கடும் எச்சரிக்கை வெளியீடு!

பூண்டி ஏரியில் நீர் நிறைந்துவிட்டதன் காரணமாகச் சென்னைக்கு வரும் நீர் சோழவரம் ஏரிக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. புதன்கிழமை நிலவரப்படி செங்குன்றம் ஏரியில் 2 ஆயிரத்து 20 கன அடி நீர் இருப்பு உள்ளது. அதேபோல் சோழவரம் ஏரியில் 118 கன அடி நீர் உள்ளது. செம்பரபாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 147 கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் நீரின் அளவு மிகவும் அதிகரித்துள்ளது. விரைவில் ஏரிகள் முழுவதும் நிரம்பிவிடும் எனத் தெரிகிறது. அதேவேளை நிலத்தடி நீரின் அளவும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனினும் சென்னையில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு பணிகளில் நிலவும் சிக்கல் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கவே செய்கிறது.

அடுத்த செய்தி