ஆப்நகரம்

சொத்து வரி தொடர்பான வழக்குகளை தீர்க்க, சென்னையில் செப்.,8ல் லோக் அதாலத்!

வழக்குகளை விரைவாக முடிக்க உதவும், லோக் அதாலத் விரைவில் நடைபெறுகிறது.

TIMESOFINDIA.COM 1 Sep 2018, 1:00 am
சென்னை: வழக்குகளை விரைவாக முடிக்க உதவும், லோக் அதாலத் விரைவில் நடைபெறுகிறது.
Samayam Tamil Chennai HC


நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைவாக முடிவுக்கு கொண்டு வர, ’தேசிய லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதிமன்றம் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி, லோக் அதாலத் நடைபெறவுள்ளது. அதில், சென்னை மாநகராட்சி மற்றும் பொதுமக்களின் சொத்து வரி தொடர்பான வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காணப்படும்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சொத்து வரி தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், பொதுமக்கள் வருவாய் துறை அதிகாரியிடம் மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று மாநகராட்சி ஆணையர் டி.கார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார். இவற்றிற்கு லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்படும்.

இந்த மனுக்களை வரும் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சமர்பிக்கலாம். இந்த வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு, லோக் அதாலத்தின் கீழ் பட்டியலிடப்படும்.

Lok adalat to be held in Chennai to resolve property tax cases.

அடுத்த செய்தி