ஆப்நகரம்

வறண்ட மடிப்பாக்கம் ஏரி, இறந்த மீன்கள், குடிநீர் தட்டுப்பாடு - சென்னையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஏரிகள் வறண்டு போனதால், சென்னை கடும் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது.

Samayam Tamil 19 Apr 2019, 5:40 pm
Samayam Tamil Madipakkam Lake
சென்னை நகரைப் பொறுத்தவரை 4 ஏரிகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. அவை பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் ஆகும். பருவமழை பொய்த்தால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதற்கு சென்னை விதிவிலக்கல்ல.

மேற்கூறிய 4 ஏரிகளிலும் கடந்த மார்ச் மாத நிலவரப்படி, 956 மில்லியன் கன அடி மட்டுமே இருந்தது. ஆனால் மொத்த சேமிப்பு 11,257 மில்லியன் கன அடி என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு ஏரிகளில் இருந்து படிப்படியாக நீர் குறைந்து வருவதால், அதிகாரிகள் மாற்று வழியை தேடி வருகின்றனர்.

சென்னையில் முக்கிய நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதனால் வடசென்னையில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அங்கு லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் ஆதம்பாக்கம், மாதவரம், போரூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் நிலைமை மேலும் மோசமாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மடிப்பாக்கம் ஏரியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் வறண்டு போய், சிறுவர்கள் ஓடி, ஆடி விளையாடுவதை பார்க்க முடிகிறது. மேலும் ஏராளமான மீன்கள் செத்துக் கிடக்கின்றன. அதனைக் காணும் போது, மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதன்மூலம் சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை அறிந்து கொள்ளலாம். உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் சென்னை மாநகர மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி