ஆப்நகரம்

திருடர்களை பிடிக்க உதவியவருக்கு பாராட்டு

சென்னையில் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்தவர்களை கைது செய்ய போலீசுக்கு உதவிய கடை உரிமையாளரை போலீசார் பாராட்டினர்

TNN 29 Oct 2017, 10:49 pm
சென்னையில் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்தவர்களை கைது செய்ய போலீசுக்கு உதவிய கடை உரிமையாளரை போலீசார் பாராட்டினர்.
Samayam Tamil maduravayal looted case founded
திருடர்களை பிடிக்க உதவியவருக்கு பாராட்டு


சென்னை மதுரவாயலில் கொள்ளைச் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக புகார்கள் வந்தன. காவல்துறையினரும் எவ்வளவோ முயற்சித்தும் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறினர்.
இந்நிலையில், அந்த பகுதியில் ஜோசப் ஞானசேகரன் என்பவர் கடை ஒன்றை நடத்தி வந்தார். அவர், தன்னுடைய கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி காமிராவில் சிக்கிய கொள்ளையர்களை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இதை வைத்துக் கொண்டு, விசாரணை நடத்தியதில், 2 சிறுவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர்.

மேலும், கொள்ளையர்களை பிடிக்க தங்களுக்கு உதவிய கடை உரிமையாளர் ஜோசப்புக்கு மதுரவாயல் காவல் உதவி ஆணையர் ஜான் சுந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்

அடுத்த செய்தி