தாம்பரம் ரயில்வே பணிமனையில் நடைபெற்றுவரும் பராமரிப்பு பணி காரணமாக, தென்மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்து செல்லும் விரைவு ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை எழும்பூர் -புதுச்சேரி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் வரும் 20 , 21 ஆகிய தேதிகளில் இருவழித் தடங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
காரைக்குடி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள், மார்ச் 14 முதல் 21ம் தேதி வரை, எழும்பூர் ரயில் நிலையத்துக்கு பதிலாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இதேபோன்று தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும் செங்கல்பட்டில் இருந்தே புறப்படும்.
போலீஸ் காவலுடன் திருச்சி கழிவறை சென்ற கைதி தப்பி ஓட்டம்: அதிர்ச்சி பின்னணி!
இதேபோன்று ஆந்திரா, கேரளா, ஒடிசாவிலிருந்து சென்னைக்கு வரும் ரயில்களும் மாற்று வழித்தடங்களில் இயக்கப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் குருவாயூருக்கு வரும், 21 ஆம் தேதி இயக்கப்பட வேண்டிய சிறப்பு ரயில், விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்" என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காரைக்குடி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள், மார்ச் 14 முதல் 21ம் தேதி வரை, எழும்பூர் ரயில் நிலையத்துக்கு பதிலாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இதேபோன்று தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும் செங்கல்பட்டில் இருந்தே புறப்படும்.
போலீஸ் காவலுடன் திருச்சி கழிவறை சென்ற கைதி தப்பி ஓட்டம்: அதிர்ச்சி பின்னணி!
இதேபோன்று ஆந்திரா, கேரளா, ஒடிசாவிலிருந்து சென்னைக்கு வரும் ரயில்களும் மாற்று வழித்தடங்களில் இயக்கப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் குருவாயூருக்கு வரும், 21 ஆம் தேதி இயக்கப்பட வேண்டிய சிறப்பு ரயில், விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்" என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.