ஆப்நகரம்

கழிப்பறையில் ஆண் குழந்தை வீச்சு; ‘பாசக்கார’தாய் பற்றி விசாரணை!

செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி கழிப்பறையில் இருந்து ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு, வீசிச் சென்றவர்கள் யார்? யாருடைய குழந்தை? அருகில் உள்ள மருத்துவமனைகளில் அல்லது சுற்றுவட்டார பகுதி வீடுகளில் ஏதாவது குழந்தை பிறந்ததா? குழந்தை இறந்து பிறந்ததா? அல்லது கொன்று இங்கு வந்து வீசப்பட்டதா? என தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 6 May 2021, 4:47 pm
செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் பொதுக்கழிப்பறை உள்ளது. நேற்று காலை சுமார் 5 மணி அளவில் இந்த கழிப்பறைக்கு அதே பகுதியை சேர்ந்த சிலர் சென்றுள்ளனர்.
Samayam Tamil குழந்தையின் சடலம்
குழந்தையின் சடலம்


அப்போது கழிப்பறையின் மதில்சுவர் மீது பிறந்து சில மணி நேரம் மட்டுமே ஆன ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் இருந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது ரத்தவெள்ளத்தில் கிடந்த அந்த குழந்தை ஏற்கனவே இறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இது குறித்து உடனடியாக செங்குன்றம் காவல் நிலையத்துக்கு அந்த பகுதி மக்கள் தெரியப்படுத்தினர்.

ரயிலில் செல்ல தடை; திடீர் அறிவிப்பால் பயணிகள் டென்ஷன்!

தகவலறிந்து செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் குழந்தையின் சடலத்தை மீட்டு, வீசிச் சென்றவர்கள் யார்? அருகிலுள்ள மருத்துவமனைகளில் அல்லது வீடுகளில் ஏதாவது குழந்தை பிறந்ததா? குழந்தை இறந்து பிறந்ததா? அல்லது கொன்று இங்கு வீசப்பட்டதா? என தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி