ஆப்நகரம்

சென்னையில் கேரள பெண்ணை ‘செம கட்டை’ என வர்ணித்த இளைஞருக்கு அடி உதை!

சென்னையில் கேரள பெண்ணை பார்த்து, ‘செம கட்டை நீ’ என வர்ணித்த இளைஞரை, அந்த பெண் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

TOI Contributor 6 May 2017, 11:29 am
சென்னையில் கேரள பெண்ணை பார்த்து, ‘செம கட்டை நீ’ என வர்ணித்த இளைஞரை, அந்த பெண் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil man caught for teasing kerala woman in chennai
சென்னையில் கேரள பெண்ணை ‘செம கட்டை’ என வர்ணித்த இளைஞருக்கு அடி உதை!


சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் வசிப்பவர் ரஞ்சித். இவர் மனைவி ஸ்ருதி (27). இவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், கேளம்பாக்கம் மார்க்கெட் பகுதியில் ஸ்ருதி நேற்று நடந்து சென்றபோது எதிரே வந்த வாலிபர் அவரை பார்த்து, ‘செம கட்டை’ என சத்தமாக வர்ணித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ருதி, உடனே அந்த இளைஞரை அடிக்க துரத்திக் கொண்டு ஓடினார். ஆனால், அந்த நபர், சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரையும் தாண்டி குதித்து, சாலையின் எதிர்ப்புறம் ஓடி, தப்பிக்க முயன்றார். ஆனாலும், ஸ்ருதி அவரை விடாமல் துரத்தி பிடித்து, சராமரியாக அடித்துள்ளார்.

இதையடுத்து, அங்கு கூடிய பொதுமக்களும் அந்த இளைஞரை கண்டித்ததோடு, இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரித்ததில், குறிப்பிட்ட நபரின் பெயர் மணி (35) என்றும், திருச்சி மாவட்டம் கல்லுக்குழி பகுதியை சேர்ந்த அவர், கேளம்பாக்கத்தில் தங்கி டிரைவராக பணிசெய்துவந்தார் என்பதும் தெரியவந்தது.

Man caught for teasing Kerala woman in Chennai.

அடுத்த செய்தி