ஆப்நகரம்

கூவம் ஆற்றில் விழுந்தவரை மீட்கும் பணி தீவிரம்

சென்னை கூவம் ஆற்றில் விழுந்த அடையாளம் தெரியாத நபரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 25 Jun 2018, 6:05 pm
சென்னை கூவம் ஆற்றில் விழுந்த அடையாளம் தெரியாத நபரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Samayam Tamil 36087361_10215426533993246_5234295562966138880_n


சென்னையில் திங்கட்கிழமை காலை நேப்பியர் பாலத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர் கூவம் ஆற்றில் விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்புத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

இதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புப் படை போலீசார் ரப்பர் படகுகள் உதவியுடன் கூவம் ஆற்றில் அந்த நபரைத் தேடி வருகிறார்கள்.

நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றில் இது போன்ற தற்கொலை முயற்சிகள் அதிகமாக நடப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி