சென்னை: பக்கத்துவீட்டுக்காரரைத் தாக்கியதாக, சென்னையில் உள்ள சூனம்பேடு காவல்நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நபர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சென்னை சூனம்பேடு பகுதியைச் சிற்றரசு என்பவர் துணைக் கல்வி அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று பக்கத்துவீட்டுக்காரரைத் தாக்கியதாக சிற்றரசை போலீசார் சிறைப்பிடித்தனர்.
இதையடுத்து, சூனம்பேடு காவல்நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த அவர், புதன்கிழமை காலை, சீலிங்கில் தனது லுங்கியை மாட்டி தூக்குப்போட்டு இறந்துள்ளார். இதையடுத்து, அவரின் உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை சூனம்பேடு பகுதியைச் சிற்றரசு என்பவர் துணைக் கல்வி அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று பக்கத்துவீட்டுக்காரரைத் தாக்கியதாக சிற்றரசை போலீசார் சிறைப்பிடித்தனர்.
இதையடுத்து, சூனம்பேடு காவல்நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த அவர், புதன்கிழமை காலை, சீலிங்கில் தனது லுங்கியை மாட்டி தூக்குப்போட்டு இறந்துள்ளார். இதையடுத்து, அவரின் உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.