ஆப்நகரம்

சென்னையில் மாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு ஆசிரியர் படுகாயம்

சென்னை, கோடம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த கல்லூரி ஆசிரியரின் கழுத்தை மாஞ்சா கயிறு அறுத்ததால் படுகாயம் அடைந்தார்.

Samayam Tamil 26 Feb 2019, 10:34 am
சென்னை, கோடம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த கல்லூரி ஆசிரியரின் கழுத்தை மாஞ்சா கயிறு அறுத்ததால் படுகாயம் அடைந்தார்.
Samayam Tamil 68161168


சென்னையில் உள்ள கேகே நகரை சேர்ந்தவர் எழிலன். 44 வயதாகும் இவர் தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலையில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த எழிலன் கழுத்தில் மாஞ்சா கயிறு மாட்டிக்கொண்டதால் அவர் கழுத்து அறுக்கப்பட்டது. கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இதனால் எழிலன் இருசக்கர வாகனத்திலிருந்து கிழே விழுந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு பசுமை தீர்ப்பாயம் மாஞ்சா கயிற்றில் பட்டம் விடுவதை தடை செய்து செய்தது. சென்னையில் 2007 ஆம் ஆண்டு முதல் மாஞ்சா கயிற்றில் பட்டம் விடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி