ஆப்நகரம்

தண்டவாளத்தில் வாக்கிங் சென்ற போது, ரயில் வந்ததால் பயத்தில் சாக்கடையில் குதித்தவர் மீட்பு!

சென்னையில் தண்டவாளத்தில் நடந்து சென்ற போது, திடீரென ரயில் வந்ததால், சாக்கடையில் குதித்தவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Aug 2019, 2:17 pm
சென்னை சைதாப்பேட்டையில் தண்டவாளத்தில் நடந்து சென்ற போது, திடீரென்று ரயில் வந்ததால்ல, பயத்தில் சாக்கடையில் குதித்தவரை பொதுமக்கள் மீட்டனர்.
Samayam Tamil saidapet


சென்னை சைதாப்பேட்டை புறநகர் ரயில்நிலையம் அருகே அடையாறு ஆறு ஓடுகிறது. இந்த ஆறு மாசுமிகுந்து சாக்கடையாக காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று சைதாப்பேட்டை சாக்கடையின் குறுக்கே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்றுள்ளார்.

அப்போது திடீரென்று அவர் நடந்து சென்ற தண்டவாளத்தில் மின்சார ரயில் வந்தது. இதைக் கண்ட அந்த மனிதர் பயத்தில், பாலத்தின் கீழ் சாக்கடை மிகுந்த ஆற்றில் குதித்தார். இதனையடுத்து ஆற்றில் யாரோ தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனே, அவரை மீட்டனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தண்டவாளத்தில் இருந்து குதித்தவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்று தெரிவித்தார். மேலும், சென்னையைச் சுற்றிப் பார்க்க இங்கு வந்ததாகவும், கடந்த மூன்று நாட்களாக சாப்பிடாமல் களைத்துப் போய் தண்டவாளத்தில் நடந்து சென்றதாகவும் தெரிவித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளத்தில் நடந்து சென்றவர், ரயிலைப் பார்த்ததும் சாக்கடையில் குதித்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பார்க்க:
தூத்துக்குடி: இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால், தாயின் சடலத்தை குப்பையில் வீசிய மகன்
பணத்துக்குப் பதில் பிளாஸ்டிக்! குப்பையைக் சேகரித்தால் இலவச கல்வி
கவுரவிக்கப்படும் தமிழக காவலர்கள்; 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு..

அடுத்த செய்தி