ஆப்நகரம்

அடகடவுளே! பெற்ற தாயை டிரம்மில் போட்டு சமாதி கட்டிய கொடூர மகன்!

சென்னை நீலாங்கரையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் உடலை பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு சிமெண்ட் மூலம் பூசிய கொடூர மனம் கொண்ட மகனை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 16 May 2022, 4:02 pm
சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகர், 2வது பிரதான சாலையில் வசித்து வந்தவர் 86 வயதான மூதாட்டி செண்பகம், அவருடன் 53 வயதான மகன் சுரேஷ் வசித்து வந்துள்ளார்.
Samayam Tamil The son arrested who put the mother body in the drum at chennai


இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களாக தாய் செண்பகத்தை காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் சுரேஷிடம் தாய் குறித்து கேட்டுள்ளனர்.

அதற்கு வயதான தாய் செண்பகம் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாகவும், அவரை வீட்டில் இருந்த டிரம்மில் போட்டு சிமெண்ட் வைத்து பூசி மூடி விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, டிரமில் கிடந்த 86 வயதான மூதாட்டியின் உடலை, டிரமில் இருந்து எடுக்க முடியாத காரணத்தால், டிரம் உடன் சேர்த்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு , மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து 174 பிரிவின் கீழ் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி