ஆப்நகரம்

மெரினாவில் பதற்றம்: போக்குவரத்துக்கு தடை, போலீசார் குவிப்பு

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக மெரினாவில் போராட்டம் வெடிக்கும் நிலை உள்ளதால், மெரினாவில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Apr 2018, 9:40 am
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக மெரினாவில் போராட்டம் வெடிக்கும் நிலை உள்ளதால், மெரினாவில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ertryui


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வாரக் கெடு முடிந்தும் வாரியத்தை அமைக்காத மத்திய அரசு, கெடு முடிந்த 2 நாட்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் 3 மாதங்கள் அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் நேற்று சிலர் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். தடைசெய்யப்பட்ட அப்பகுதியில் போராட்டம் நடத்த வேண்டாம் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரைப் பகுதிக்கு அருகில் இருக்கும் சர்வீஸ் ரோட்டில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், பாதசாரிகள் எந்த தடையும் இல்லாமல் வழக்கம்போல் அந்த வழியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

சனிக்கிழமை நள்ளிரவும் பெசன்ட் நகர் பகுதியில் சிலர் காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்