ஆப்நகரம்

மணலி டூ ஒடிசா- புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இப்படியொரு சோதனை!

தங்கள் சொந்த ஊருக்கு நடைபயணமாக புறப்பட்டுச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Samayam Tamil 16 Apr 2020, 9:45 am
நாடு முழுவதும் இரண்டாவது கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. வரும் மே 3ஆம் தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டும் உரிய அனுமதி பெற்று வெளியே வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை தான் மிகவும் மோசமாக இருக்கிறது. சமீபத்தில் மும்பையில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.
Samayam Tamil மணலி தொழிலாளர்கள்


வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் இவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் நடைபயணமாக புறப்பட்டு செல்வதை காண முடிகிறது.

மத்திய, மாநில அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து தருகின்றனர். ஆனால் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதே நல்லது என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.

சென்னையில் பட்டம் விட்ட 8 பேர் கைது..! காவல்துறையினர் கவலை

இந்நிலையில் சென்னை மணலியில் இருந்து ஒடிசாவிற்கு 74 புலம்பெயர் தொழிலாளர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் செக்போஸ்டில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அனைவரும் மணலி பேருந்து நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு 22 குடும்பத்தினருக்கு தேவையான ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளர்களிடம் போலீசார் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது ஊரடங்கு முடிவுக்கு வரும் வரை தொழிலாளர்களிடம் வாடகை வசூலிக்கக் கூடாது. எந்த வகையிலும் தொந்தரவு செய்யக் கூடாது என்று எச்சரித்தனர். பின்னர் தனியார் வாகனம் ஒன்றின் மூலம் தாங்கள் தங்கியிருந்த வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி