ஆப்நகரம்

நீதிபதி கொடுத்த ஐடியா; அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்!

பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Samayam Tamil 13 Jun 2022, 7:55 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழக பள்ளிகளில் யோகா பயிற்சி கொண்டு வர வேண்டும் என கோரிக்கை
  • முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்
  • யோகா உலக சாதனை நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Anbil Mahesh
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள வேலப்பன்சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்றின் வளாகத்தில் பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது, உலக யோகா தினத்தை ஒட்டி 415 மாணவர்கள் கடினமான சமகோண ஆசனத்தில் ஒருமணி நேரம் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதுமட்டுமின்றி களிமண்ணால் 30 விநாடிகளில் சிலை செய்து உலக சாதனை படைக்கும் பி.கே.முனுசாமி என்பவரின் முயற்சியும் அரங்கேறியது.
இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்கள் கொடியசைத்து வைத்து நிகழ்வை தொடங்கி வைத்தனர். நிர்ணயித்த நேரத்தை விட கூடுதலாக 27 நிமிடங்கள் சமகோண ஆசனம் செய்து ஒரு மணி 27 நிமிடங்கள் ஆசனம் செய்து உலக சாதனையை படைத்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இது கோல்டன் புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சுரேஷ் குமார், தமிழகப் பள்ளிகளில் யோகா பயிற்சியை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், இதுதொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இது அங்கு கூடியிருந்த மாணவ, மாணவிகளுக்கு மிகுந்த உற்சாகமூட்டும் தகவலாக அமைந்தது. மேலும் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார். அவர் மூலமாக எங்கள் துறைக்கு வழிகாட்டுதல்கள் அனுப்பப்படும். அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்படும். மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்ல அனைத்து பள்ளிகளிலும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

சென்னை மக்கள் ஹேப்பி; குடிநீர் வாரியம் செம அறிவிப்பு!

எதிர்க்கட்சி யார் என்பது தொடர்பாக அதிமுக, பாஜக இடையிலான மோதல் போக்கு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, தோழமை கட்சிகளுக்கு இடையிலேயே ஒற்றுமை இல்லை என்பதை தான் காட்டுகிறது. தமிழகத்தில் திராவிட கட்சிகள் மட்டும் தான் ஆள முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் கூறியதை அமைச்சர் அன்பில் மகேஷ் நினைவுபடுத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி