ஆப்நகரம்

கிழக்கு - மேற்கு தாம்பரம் பகுதிகளை இணைக்க மேம்பாலங்கள் - பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு..!

சென்னையின் நுழைவு வாயிலான தாம்பரம் பகுதிகளை இணைக்க நடை மேம்பாலம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் வேலு தகவல்

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 1 Apr 2023, 4:04 pm
2022-23 ஆம் ஆண்டிற்கான நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் சட்டப்பேரவை பட்ஜெட் தொடரில் நடந்து வருகிறது. அப்போது சென்னை பெருநகர வளர்ச்சி திட்டன்கீழ் சாலை வசதிக்கான 2023-24 ஆண்டில் எடுக்கப்படவுள்ளதை குறித்து அமைச்சர் எ.வ. வேலு தாக்கல் செய்த விளக்க குறிப்பில் கூறப்பட்டிருப்பது;
Samayam Tamil tambaram


பக்கிங்காம் கால்வாயைக் கடந்து கடற்கரைச் சாலையில் இணைப்பதற்கு, கிழக்கு கடற்கரைச் ஆலோசகர்கள் (consultants) மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) மூலமாக பக்கிங்காம் கால்வாய் கரையில் இறங்கும் வண்ணமும், உட்புறச்சாலைகளை இணைக்கும் வண்ணமும் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே சுற்றமைப்புடன் (Rotary) கூடிய மேம்பாலம் அமைப்பதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

பெருங்களத்தூரில் ஜி.எஸ்.டி. சாலையிலிருந்து மாடம்பாக்கம் அருகே வேளச்சேரி தாம்பரம் சாலைக்கு இணைப்பு ஏற்படுத்தும் பொருட்டு, 9.30 கி.மீ. நீளத்திற்கு ஆறுவழித்தட தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில், மப்பேடு பகுதியில் 3.05 கி.மீ. நீளத்திற்கு ரூ.25.00 கோடி
மதிப்பில் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது,

நெடுங்குன்றம் பகுதியில் 2.63 பகுதியில் 2.63 கி.மீ. நீளத்திற்கு ரூ.36.69 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது மற்றும் புத்தூர் பகுதியில் 1.55 கி.மீ. நீளத்திற்கு ரூ.55.77 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மேலும், எஞ்சியுள்ள பகுதிகளில், பணிகள் மேற்கொள்ள நில எடுப்பு பணிகளும் வனத்துறை நிலத்தை நிலமாற்றம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

2022-23ஆம் ஆண்டில், பெரிய மேற்கத்திய சாலையில் (GWT) நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு மற்றும் உள்வட்டச் சாலையில் (IRR) செந்தில் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் நகர் நடைமேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு ரூ.30.67 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, ஆய்வு மற்றும் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. i) முகப்பேரில் DAV & வேலம்மாள் பள்ளி அருகேயும் மற்றும் ii) கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளை இணைக்கும் வகையிலும் நடைமேம்பாலங்கள் அமைக்கும் பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி