ஆப்நகரம்

மோசமான வானிலையிலும் நேபாளத்தில் தமிழர்கள் மீட்கும் பணி தீவிரம்: ஆர்.பி. உதயகுமார்

மோசமான வானிலை நிலவும் போதும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Jul 2018, 10:10 am
மோசமான வானிலை நிலவும் போதும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil minister-udhaya-kumar
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க விரைந்து நடக்கும் மீட்பு பணிகள்- ஆர்.பி. உதயகுமார் தகவல்


கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற தமிழர்கள் உட்பட இந்தியர்கள் பலர் நேபாள நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

நேபாளத்தின் ராணுவ உதவியோடு, இந்திய தூதுரகத்தின் மூலம் அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக வருவாய் துறை அமைச்சர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், யாத்திரைக்கு சென்ற நேபாளத்தில் நிலவும் 23 தமிழர்கள் மோசமான வானிலையில் சிக்கியுள்ளனர். இருந்தாலும், இந்திய பக்தர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், அங்கு உயிரிழந்த யாத்ரீகர்களில் ஒருவரான ராமசந்திரனின் உடல் தமிழக கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் கைலாஷ் யாத்திரைக்கு சென்ற தமிழர்களை கணக்கெடும் பணி தொடங்கியுள்ளது.

இதுவரை மொத்தம் 19 தமிழர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழர்களை மீட்க டெல்லியிலிருந்து இரண்டு தமிழக அதிகாரிகள் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி தமிழ்நாடு இல்லத்தை சேர்ந்த பொறுப்பு அலுவலர் ராஜசேகரன், வரவேற்பாளர் சத்யசிவம் நேபாளத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் மூலம் தமிழர்களுக்கான உதவிகள் செய்யப்பட்டு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

இதுவரை 104 பக்தர்கள் மீடக்கப்பட்டுள்ள நிலையில், நேபாளத்தை விட திபெத் பகுதிகளில் அவர்களை தங்கவைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி