ஆப்நகரம்

இன்னும் எத்தனை பேரை நீக்குவார்கள்? கொந்தளிக்கும் அழகிரி தரப்பு

“தி.மு.க.வில் இருந்து இன்னும் எத்தனை பேரை நீங்குவார்கள்” என மு.க.அழகிரி ஆதரவாளர் மன்னன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 5 Sep 2018, 2:56 pm
“தி.மு.க.வில் இருந்து இன்னும் எத்தனை பேரை நீங்குவார்கள்” என மு.க.அழகிரி ஆதரவாளர் மன்னன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil உவுஎ


சென்னையில் கருணாநிதியின் மறைந்த 30வது நாளை முன்னிட்டு அமைதிப் பேரணி மு.க.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இதில், அழகிரியின் ஆதரவாளர்கள், குடும்பத்தினர் கலந்துகொண்டுள்ளனர்.

திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகே தொடங்கிய பேரணி மெரினாவை நோக்கி சென்று கருணாநிதி நினைவிடத்தில் முடிந்தது. அங்கு அழகிரி உள்ளிட்ட அனைவரும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.
பேரணியில் பங்கேற்ற மதுரை முன்னாள் மேயரும் அழகிரியின் ஆதரவாளருமான மன்னன், “அழகிரியை சென்னை விமானநிலையத்தில் வரவேற்ற தி.மு.க நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கினர். ஆனால், இன்று லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் அமைதிப் பேரணியில் பங்கேற்றுள்ளனர். உங்களால் எத்தனை பேரை நீக்க முடியும்? கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் நாங்கள் தி.மு.க.வினர்தான்'' எனத் தெரிவித்தார்.
அழகிரி நேற்று மதுரையிலிருந்து சென்னை வந்தபோது, அவரை வரவேற்ற தி.மு.க. நிர்வாகி ரவியை கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நீக்கப்படுவதாக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்