ஆப்நகரம்

”மெரினாவில் தலைவருக்கு இடம் மறுக்கப்பட்டிருந்தால் நானும் இறந்திருப்பேன்”- ஸ்டாலின் உருக்கம்

மெரினாவில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கையை பிடித்து கெஞ்சினேன் என நா தழுதழுத்த குரலில் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

Samayam Tamil 14 Aug 2018, 4:36 pm
மெரினாவில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கையை பிடித்து கெஞ்சினேன் என நா தழுதழுத்த குரலில் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
Samayam Tamil dc-Cover-2r79tg0grsk591tqklo3tb1p54-20180322013019.Medi.
திமுக செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உரை


திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு, அவர் இல்லாத முதல் செயற்குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் அவசரக் கூட்டமாக நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் க. அன்பழகன், செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், துரைமுருகன், ஆ. ராசா, கனிமொழி எம்.பி, ஜெ. அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே மு.க. ஸ்டாலின் தனது பேச்சை தொடங்கினார். கருணாநிதி இல்லாத செயற்குழு கூட்டத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நீங்கள் தலைவரை இழந்துள்ளீர்கள், நான் தந்தையை இழந்துள்ளேன் என்று தழுதழுத்த குரலில் பேசினார்.

மெரினாவில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் கோரிக்கை வைத்தே. வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டும் என்றால் அவரது கைகளை பிடித்து கொண்டு கெஞ்சினேன்.

ஆனால் எங்களை விரட்ட, பார்க்கலாம் என்று மட்டும் சொல்லி அனுப்பினார். பிறகு கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்து செய்திகள் வெளியாகின. இதை நெஞ்சை கணக்கச்செய்தது.

பிறகு வழக்கறிஞர் வில்சன் அளித்த ஆலோசனை படி சென்னை உயர்நீதிமன்றத்தில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய முறையிடப்பட்டது. பிறகு அவரது குழுவினரின் போராட்டத்தால் நீதிமன்றம் கருணாநிதியை மெரினா அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்தது.

கருணாநிதியின் எண்ணத்தை நிறைவேற்றிய மூத்த வழக்கறிஞர் வில்சன் உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவினருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அந்த உரையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்