ஆப்நகரம்

வடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னயைில் காலை முதல் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

TNN 26 Oct 2017, 10:06 am
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
Samayam Tamil monsoon rain starts in chennai
வடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னயைில் காலை முதல் மழை

தென்கிழக்கு வங்க கடல், ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை மையம் அறவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலையில் கனமழை பெய்துள்ளது. ஆழ்வார்ப்பேட்டை, பாண்டிபஜார், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழையும், அமைந்தகரை, அண்ணா நகர், தாம்பரம், மேடவாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பரவலான மழையும் பெய்து வருகிறது.

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குறிப்பாக திருவள்ளூவரில் தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது.

அடுத்த செய்தி