ஆப்நகரம்

சென்னையில் அதிகரிக்கும் வாகனத் திருட்டு

சென்னை இருசக்கர வாகனத் திருட்டு அதிகரித்து வருகிறது. இவை பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன. குறிப்பாக வடசென்னையில் வாகனத் திருட்டு சர்வசாதாரணமாக நடைபெறுகிறது.

Samayam Tamil 27 Dec 2018, 6:09 pm
சென்னை இருசக்கர வாகனத் திருட்டு அதிகரித்து வருகிறது. இவை பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன. குறிப்பாக வடசென்னையில் வாகனத் திருட்டு சர்வசாதாரணமாக நடைபெறுகிறது.
Samayam Tamil TH-PARKING_1


நேற்று 5 இருசக்கர வாகனங்களைத் திருடியதற்காக நான்கு இளைஞர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். வாகங்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. இவர்கள் இதுவரை 30 இருசக்கர வாகனங்களைத் திருடி விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குசும்பி ரமேஷ், கொட்டிவாக்கம் பைக் மெகானிக் சுபாஷ், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஜயன் என்கிற கோர்கா ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் 17 வயது சிறுவன் ஒருவனும் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இவர்கள் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களின் ஆவணங்களை மாற்றி ஆந்திராவில் விற்று பணம் ஈட்டியுள்ளனர். 17 வயது சிறுவன் மட்டும், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்