ஆப்நகரம்

தீபாவளி... 24 மணி நேரமும் இயங்கவுள்ள எம்டிசி பேருந்துகள்!

தீபாவளி பண்டிகையையொட்டி, வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் பேருந்து நிலையங்களை எளிதாக சென்றடைய வசதியாக, நவம்பர் 11 முதல் 13 ஆம் தேதி வரை 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 10 Nov 2020, 3:10 pm
தீபாவளி பண்டிகையையொட்டி, வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து நவம்பர் 11 முதல் 13 ஆம் தேதி வரை 9,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
Samayam Tamil கோப்பு படம்
எம்டிசி சிறப்பு பேருந்துகள்


கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் என மொத்தம் ஆறு இடங்களில் இருந்து இந்தச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பிட்ட ஆறு பஸ் ஸ்டாண்டுகளை எளிதாக சென்றடைய வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்க எம்டிசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சிட்டிசன்களுக்கு குட் நியூஸ்... பருவமழைக் காலத்தில் மெல்ல நிரம்பும் ஏரிகள்!

நாளை முதல் ( நவம்பர் 11) நவம்பர் 13 ஆம் தேதி வரை, 24 மணி நேரமும் கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி