ஆப்நகரம்

Music Club: இசையால் ரவுடியிசத்தை துரத்தி அடிக்க ஏற்பாடு- சென்னைக் கல்லூரியில் புதிய முயற்சி!

சென்னைக் கல்லூரி ஒன்றில் ரவுடியிசத்தை ஒழிக்க, இசை மூலம் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Aug 2019, 3:24 pm
தமிழகத்தில் சமீப காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அற்ப காரணங்களுக்காக கொலை செய்யப்படும் விஷயங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. கோஷ்டி மோதல் என்ற பெயரில் கல்லூரி மாணவர்களும் அடிதடியில் ஈடுபடுகின்றனர்.
Samayam Tamil Music Club


சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்கள் உடன் மோதிக் கொண்ட காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் மாணவர்களை பல்வேறு வகைகளில் நல்வழிப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

Also Read: 'மெட்ராஸ் டே’ கொண்டாட்டத்தின் நிறுவனருக்கு இப்படியொரு சிறப்பு செய்த அமெரிக்க தூதர்!

இதுபோன்ற வன்முறைகளால் வருங்கால சமுதாயத்தின் வளமான வாழ்வு குறித்து கேள்வி எழுகிறது. இந்நிலையில் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் மியூசிக் கிளப் தொடங்கப்பட்டுள்ளது.

Also Read: இதோ வந்திருச்சு தண்ணீர்; இனி பிரச்சினை இல்ல- சென்னையைக் காக்க வரும் வீராணம் ஏரி!!

இதன்மூலம் மாணவர்களிடையே இருக்கும் ரவுடியிச உணர்வை களைய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த மியூசிக் கிளப்பை இசையமைப்பாளர் தீனா தொடங்கி வைத்தார்.

Also Read: Namma Chennai: நம்ம சென்னை பிறந்து வளர்ந்த கதை....!!

இதில் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பாடி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த கிளப் மூலம் பல்வேறு இசை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு இசைக் கருவிகள் பரிசாக வழங்கப்பட உள்ளன.

அடுத்த செய்தி