ஆப்நகரம்

யானைக்கவுனி பகுதியில் புதிய பாலம்- அமைச்சர் அறிவிப்பு..!

சென்னை யானைக்கவுனி பகுதியில் புதிய பாலம் கட்டப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

TNN 23 Mar 2017, 4:15 am
சென்னை யானைக்கவுனி பகுதியில் புதிய பாலம் கட்டப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil new bridge to be built at elephant gate in chennai
யானைக்கவுனி பகுதியில் புதிய பாலம்- அமைச்சர் அறிவிப்பு..!


நேற்று நடைபெற்று சட்டமன்ற கூட்டத்தில், திமுக உறுப்பினரான சேகர் பாபு,” சென்னை யானைக்கவுனி பகுதியில் தற்போதும் பழைய பாலமே வாகன ஓட்டிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் பெரும் சிரமத்தை அடைகின்றனர். மேலும் அந்த பாலத்தினால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் வேலுமணி,” யானைகவுனி பகுதியில் சென்னை மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை ஆகியவற்றின் 50:50 பங்களிப்பில் புதிய பாலம் கட்டப்படும். பழைய பாலமானது இடிக்கப்படும். இது குறித்த விரிவான் அறிக்கையையும், வடிவமைப்பையும் ரயில்வே துறை அளித்துள்ளது.” என பதிலளித்தார்.

மேலும் இந்த பாலத்தின் அகலத்தை 47 மீட்டரிலிருந்து 150 மீட்டராக அதிகரிக்கவும் ரயில்வே முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.இது குறித்த விரிவான திட்டம் கைக்கு வந்தவுடம், பாலம் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

New bridge to be built at Elephant Gate in Chennai

அடுத்த செய்தி