ஆப்நகரம்

குற்றவாளிகளைப் பிடிக்க மொபைல் ஆப்; 15 நாளில் 8 பேர் கைது

குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் ஆப் மூலம் 15 நாளில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TNN 17 Nov 2017, 7:14 pm
குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் ஆப் மூலம் 15 நாளில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil new mobile app for chennai police
குற்றவாளிகளைப் பிடிக்க மொபைல் ஆப்; 15 நாளில் 8 பேர் கைது


குற்றவாளிகளை பிடிப்பதற்காக சென்னை தி.நகர் காவல் வட்டத்திற்கு உட்பட்ட 500 பேலீசாருக்கு பேஷ் டிராக்கர் என்னும் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 1 ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த இந்த மொபைல் ஆப் மூலம், இது வரை 8 குறறவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மொபைல் ஆப்பில், சுமார் 12,000 குற்றவாளிகளின் புகைப்படங்கள் உள்ளன. வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளின் போதோ, பிற விசாரணைகளின் போதே, பிடிபடுவர்களின் முகத்தை இந்த ஆப் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, அவர்கள் பழைய குற்றவவாளிகளா என்பதை இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்.

அடுத்த செய்தி