ஆப்நகரம்

நிலத்தடி நீர் குறைந்து போய் விட்டதால் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் விளக்கம்!!

திமுக எம்.பிக்கள் தமிழில் பேசி பதவியேற்ற விவகாரத்தில், பொய் பேசுபவர்கள் என்று தமிழக முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

Samayam Tamil 19 Jun 2019, 12:24 pm
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு மண்டப கட்டட பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டப கட்டட பணிகள் 60% முடிந்து விட்டன.
Samayam Tamil Edappadi Palaniswami


புதிய வடிவமைப்புடன் நினைவு மண்டபம் அமைக்கப்படுவதால் கால தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும் கட்டட பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். 5 மாதத்திற்குள் ஜெயலலிதா நினைவு மண்டப பணிகள் முடிவடையும்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள், தனித்தனியாக வந்து ஆசிர்வாதம் பெற்று சென்றுள்ளனர். திமுக எம்.பிக்கள் பலர் இந்தி படித்துவிட்டு, தமிழ் வாழ்க என்று பொய்யாக நாடாளுமன்றத்தில் உறுதிமொழி எடுக்கின்றனர்.

அதிமுகவினர் மனதிலும் தமிழ் இருக்கிறது. நாங்கள் உண்மையை மட்டும் தான் பேசுவோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நிலத்தடி நீர் குறைந்து போய் விட்டதால், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இன்னும் 3, 4 மாதங்களுக்கு நிலத்தடி நீரை எடுத்து தான், மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். தமிழகத்தில் பருவமழை பொய்த்து போய் விட்டது. அக்டோபர், நவம்பர் வரை தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டியுள்ளது. ஓரிரு இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுக்க மாபெரும் தண்ணீர் பஞ்சம் இருப்பதாக பொய்யான தகவலை பரப்ப வேண்டாம். குடிநீர் பிரச்சனையை தீர்க்க உள்ளாட்சி துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அடுத்த செய்தி