ஆப்நகரம்

யாருக்கும் லீவு கிடையாது- திடீர் உத்தரவை வெளியிட்ட மாநகர போக்குவரத்துக் கழகம்!

போக்குவரத்து ஊழியர்கள் நாளை கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 22 Dec 2019, 8:51 am
சென்னை நகரில் இயங்கி வரும் பேருந்துகள் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
Samayam Tamil CMTC


இதில் வெள்ளைப் பலகை கொண்ட சாதாரண சேவை, பச்சை பலகை கொண்ட விரைவு சேவை, நீலப் பலகை கொண்ட சொகுசு சேவை, குளிர்சாதனப் பேருந்து சேவை, கரும்பலகை கொண்ட இரவு நேர சேவை, பெண்கள் சிறப்பு பேருந்து சேவை ஆகியவற்றை அளித்து வருகிறது.

எழுத்தாளர் நஞ்சுண்டன் மறைவு!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் 3,000க்கும் அதிகமான பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை என்று மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான போக்குவரத்து சேவையை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வழங்கி வருகிறது. இந்த பணி எந்தவித இடையூறும் இன்றி தொடர வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம்: போராட்டம் நடத்திய பாஜகவினர் 299 பேர் கைது...

எனவே போக்குவரத்து கழக ஊழியர்கள் அனைவரும் நாளை தவறாமல் பணிக்கு வர வேண்டும். நாளை வழங்கப்பட்ட விடுப்புகள் அனைத்து ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னையில் நாளை எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது.

திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது?

இந்த சூழலில் மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி