ஆப்நகரம்

இனி குற்றவாளிகள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!! வடசென்னையைச் சுற்றிலும் சிசிடிவி!!

வடசென்னையில் சுமார் 20 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Oct 2018, 12:58 pm
வடசென்னையில் மட்டும் சுமார் 20 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil இனி குற்றவாளிகள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!! வடசென்னையைச் சுற்றிலும் சிசிடிவி!!
இனி குற்றவாளிகள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!! வடசென்னையைச் சுற்றிலும் சிசிடிவி!!


சென்னையில் பெருகிவரும் குற்றங்களைத் தடுக்க, வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு சென்னை மாநகராட்சி காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

அந்த வகையில், சிசிடிவி கேமராக்களின் தேவையை உணர்த்தும் வகையில் விவேக் மற்றும் விக்ரம் உள்ளிட்ட நடிகர்களை வைத்து குறும்படங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டது.

இந்நிலையில், செம்பியம் காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறையை சென்னை பெருநகர வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சிசிடிவி கேமராக்கள் உதவுகின்றன. வடசென்னை முழுவதும் 20 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்