ஆப்நகரம்

வடக் கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

டந்த மாதம் இறுதியில் பெய்த வடக்கிழக்குப் பருவமழை, இடைவிடாமல் பெய்ததால் மக்கள் பெரு அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

TNN 12 Nov 2017, 10:12 am
கடந்த மாதம் இறுதியில் பெய்த வடக்கிழக்குப் பருவமழை, இடைவிடாமல் பெய்ததால் மக்கள் பெரு அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil north seaside district can expect heavy rain today and tomorrow says meteorological centre
வடக் கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்


தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் வடக் கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் தொடங்கிய பருவ மழை இடைவிடாமல் பெய்ததால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர்.

கடந்த சில தினங்களாக மழை பெய்யாத்தால் ஆங்காங்கே தேங்கியிருக்கும் மழைநீர் வடிந்து வருகிறது. இந்நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று நாளை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி