ஆப்நகரம்

UPSC Exam: மாற்றுத்திறனாளி தேர்வர்கள் மீது அலட்சியமா?

அறிவிக்கப்பட்டதைத் தவிர வேறெந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்பது தேர்வர்கள் மற்றும் உடன்வந்தவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

Samayam Tamil 4 Oct 2020, 10:33 am
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. மார்ச் மாதம் 21ஆம் தேதி நடக்கவிருந்த இந்த தேர்வுகள் கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது.
Samayam Tamil UPSC Exam


தமிழ்நாடு முழுக்க 72 நகரங்களில், 2,569 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதுகின்றனர். காலை 9.30 மணிமற்றும் பகல் 2.30 மணி என்று இரு கட்டங்களாக தேர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள அரசு பெண்கள் மேநிலைப்பள்ளி ஒன்றை மாற்றுத்திறனாளிகளுக்காக்ன தேர்வு மையமாக ஏற்பாடு செய்திருந்தது தேர்வு முகமை. ஆனால், அறிவிக்கப்பட்டதைத் தவிர வேறெந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்பது தேர்வர்கள் மற்றும் உடன்வந்தவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

குறைந்த பட்சம் ஒரு சக்கர நாற்காலி கூட ஏற்பாடு செய்யப்படவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் தேர்வர்கள். பார்வை மற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டும் விதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. கொரோனா தொற்று சூழலுக்கு மத்தியில், கடும் சவால்களைச் சந்தித்தே இவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்திருக்க முடியும். இந்நிலையில், ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்படாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி