ஆப்நகரம்

new year celebration: எலக்ட்ரிக் ட்ரைன் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Samayam Tamil 31 Dec 2020, 8:36 pm
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர், வேளச்சேரி ஆகிய இடங்களுக்கு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil கோப்பு படம்
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை புறநகர் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


இதேபோன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ஆகிய இடங்களுக்கும் ரயில்கள் இயங்கி வருகின்றன.

இந்த அனைத்து மார்க்கங்களிலும் வார நாட்களான திங்கள் முதல் சனிக்கிழமை வரை மொத்தம் 500 ரயில்களும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் விழா கால விடுமுறை நாட்களில் 50 ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை டூ திருப்பதி...ரயில் பயணிகளுக்கு மீண்டுமொரு ஹேப்பி நியூஸ்!

இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டி பயணிகளின் நெருக்கடியை கருத்தில் கொண்டு நாளை மற்றும் 2,3 ஆம் தேதிகளில் தினமும் 410 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி