ஆப்நகரம்

வேலை செய்த இடத்துலயே..; கொரோனாவுக்கு நர்ஸ் பலி!

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவத்தால், மருத்துவமனையில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Samayam Tamil 11 May 2021, 3:53 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் இந்திரா (40). சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை செவிலியர். கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய் தடுப்பு பணியில் இந்திரா ஈடுபட்டு வந்தார்.
Samayam Tamil கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்


இந்நிலையில் கடந்த மாதம் இந்திராவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து இந்திராகொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1ம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

15 வயது சிறுமி தற்கொலை; தந்தை சிக்கியது எதற்காக?

ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று திடீரென இந்திரா இறந்தார். தகவலறிந்து மருத்துவர்கள், அவருடன் சேர்ந்து பணியாற்றியவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

அடுத்த செய்தி