ஆப்நகரம்

கடல் குடிநீர் நிலையத்துக்கு பாதிப்பில்லை: மெட்ரோ வாட்டர் தகவல்

எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட கப்பல் விபத்து காரணமாக மீஞ்சூர், நெம்மேலி கடல் குடிநீர் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

TNN 6 Feb 2017, 4:46 pm
சென்னை: எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட கப்பல் விபத்து காரணமாக மீஞ்சூர், நெம்மேலி கடல் குடிநீர் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil oil spillage hasnt affected desal plants chennai metrowater says
கடல் குடிநீர் நிலையத்துக்கு பாதிப்பில்லை: மெட்ரோ வாட்டர் தகவல்


கடந்த ஜனவரி 28ஆம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே 2 சரக்குக் கப்பல்கள் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில், கப்பலில் நிரப்பப்பட்டிருந்த கச்சா எண்ணெய் டன் கணக்கில் கடலில் கலந்தது.

இச்சம்பவம் நடந்த பகுதியில் இருந்து சுமார் 10கி.மீ தொலைவில் அமைந்துள்ள மீஞ்சூர் கடல் குடிநீர் நிலையத்தில் இருந்து வடசென்னைக்கு நாள்தோறும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடலுக்கு அடியில் சுமார் 9 கி.மீ ஆழத்தில் பைப் லைன்கள் போடப்பட்டுள்ளதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ வாட்டர் அதிகாரி கூறுகையில், கடல் குடிநீர் நிலையத்துக்கு அருகே எவ்வித கச்சா எண்ணெய் கழிவும் பரவவில்லை. தற்போதுள்ள சூழல் காரணமாக தினமும் குடிநீர் பரிசோதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை மீஞ்சூர் நிலையத்தில் 95 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தியும், நெம்மேலி நிலையத்தில் 91 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நெம்மேலி நிலையத்தில் உள்ள நீர், கடலில் சுமார் 14கி.மீ ஆழத்தில் 1,050 மீட்டர் நீள பைப்லைன் மூலம் தென் சென்னை வாசிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை கடற்பரப்பில் படர்ந்துள்ள கச்சா எண்ணெய் கழிவை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும். தற்போதுவரை 95% எண்ணெய் அகற்றும் பணி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The recent oil spillage off Kamarajar Port in Ennore has had no impact on the two desalination plants in Minjur and Nemmeli, officials in Chennai Metropolitan Water Supply and Sewerage Board said on Monday.

அடுத்த செய்தி