ஆப்நகரம்

கல்விக் கடவுளாகும் முருகன்...வடபழநி கோயிலில் ஆன்லைன் வகுப்புகள்!

வடபழநி முருகன் கோயிலில் நடத்தப்படும் திருப்புகழ் வகுப்புகள் இனி ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வுகுப்புகளில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

Samayam Tamil 31 Oct 2020, 4:27 pm
சிறுவர்களுக்கு பக்தியுடன் நல்லொழுக்கத்தை கற்றுதரும் நோக்கில், சென்னை வடபழநி முருகன் கோயிலில் தமிழ் ஸ்லோகம், திருப்புகழ் வகுப்புகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.
Samayam Tamil வடபழநி முருகன்
சென்னை வடபழநி முருகன் கோயில்


கொரோனா தொற்று பரவல் காரணமாக சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த இந்த வகுப்புகள் இன்று முதல் 'கூகுள்' மீட் தொழில்நுட்ப வசதியின் வாயிலாக ஆன்லைன் வகுப்புகளாக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.

பத்து வயதுக்குட்பட்ட தங்களது குழந்தைகளை இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்று வடபழநி முருகன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பருவமழை vs சென்னை : மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம்

தமிழ் ஸ்லோகம், திருப்புகழ், சாஸ்திர விஞ்ஞானம், நல்லொழுக்க சிந்தனைகள் என்று நான்கு பகுதிகளாக ஒராண்டுக்கு இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி