மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே நேரத்தில் வந்துள்ளனர். அப்போது, தினகரனின் ஆதரவளார்கள் ஒன்றாக ஓபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு தரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் காலணிகளை வீசி எறிந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ட்டது. இதைத் தொடர்ந்து போலீசார், இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வைத்து அங்கிருந்து அவர்களை வெளியேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை விமான நிலையத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே நேரத்தில் வந்துள்ளனர். அப்போது, தினகரனின் ஆதரவளார்கள் ஒன்றாக ஓபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு தரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் காலணிகளை வீசி எறிந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ட்டது. இதைத் தொடர்ந்து போலீசார், இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வைத்து அங்கிருந்து அவர்களை வெளியேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.