ஆப்நகரம்

தலைநகரில் மீண்டும் மெல்ல தலைத்தூக்கும் கொரோனா!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று புதிதாக 621 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகரில் 180 பேரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Jan 2021, 9:25 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஆளாவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாகவே ஆயிரத்துக்கும் கீழாகதான் பதிவாகி வருகிறது என்பது ஆறுதல் அளிக்கும் செய்திதான்.
Samayam Tamil கோப்பு படம்
மாநிலத்திலேயே அதிக அளவாக சென்னையில் இன்று புதிதாய் 180 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது


ஆனால் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளவர்களில் தலைநகர் சென்னையில் மட்டும் 25 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்பது கவலையளிக்கும் செய்தியாக உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள 621 பேரில், சென்னையில் மட்டும் 180 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tasmac Pongal Sale: பொங்கலாவது, போகியாவது...சரக்கு அடிச்சிக்கிட்டேதான் இருப்பாங்க போல!

இதனையடுத்து மாநிலத்தில் இதுவரை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை 8.29 லட்சமாக உயர்ந்துள்ளது. இவர்களில் 6,299 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேசமயம், கொரோனா சிகிச்சை முடிந்து 805 பேர் டிஜ்சார்ஜ் ஆனதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 8.11 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இன்று ஐந்து பேர் உயிரிழந்ததையடுத்து, மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12,251 ஆகியுள்ளது.

மாணவிக்கு லவ் டார்ச்சர்... கம்பி எண்ணும் கல்லூரி பேராசிரியர்!

கொரோனாவே இல்லாத மாவட்டமாக நேற்று இருந்த பெரம்பலூரில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம், இன்றைய நிலவரப்படி, அரியலூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டம் என்ற பெருமையை பெறுகிறது.

அடுத்த செய்தி