ஆப்நகரம்

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல்

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 18 Jun 2017, 12:44 pm
சென்னை: பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil pachaiyappan college principal attacked by students
பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல்


கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பச்சையப்பன் கல்லூரி திறக்கப்பட்டது. மேலும் இன்று பஸ் டே கொண்ட்டாடத்தில் தடையை மீறி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் காளிராஜ் கல்லூரிக்கு அடையாள அட்டை இல்லாமல் வந்த மாணவர்களை சோதனை நடத்தினார் .

அப்போது அந்த கல்லூரி நுழைவு வாயிலுக்கு அருகில் மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். அப்போது போலீசாருக்கு மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. இதனை தடுப்பதற்காக கல்லூரி முதல்வர் காளிராஜ் பேச்சு வார்த்தை நடத்த சென்றார்.

இதனையடுத்து போலீசார் மீது அந்த மாணவர்கள் கல் வீசினார்கள். இதில் பேச்சுவார்த்தை நடத்த சென்ற முதல்வரும் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் முதல்வரின் மண்டை உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 36 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி