ஆப்நகரம்

கோயில் புரோகிதரின் காம லீலைகள், தெருவில் நடந்த சிசிடிவி!

காம இச்சைக் காரணமாக பொது இடத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட பல்லாவரம் பெருமாள் கோயில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்...

Samayam Tamil 22 Nov 2020, 4:48 pm
சாலையில் நடந்து செல்லும் இளம் பெண்களைக் குறி வைத்து, அவர்களிடம் ஆண் உறுப்பைக் காட்டுவது, மார்பகத்தைத் தொடுவது, பின்னால் தட்டிவிடுவது எனக் காம லீலைகளை அரங்கேற்றி வந்த பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil கோயில் புரோகிதரின் காம லீலைகள், தெருவில் நடந்த சிசிடிவி!
கோயில் புரோகிதரின் காம லீலைகள், தெருவில் நடந்த சிசிடிவி!


சென்னை பழைய பல்லாவரம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. வயது 30. இவர் புரோகிதராக பணிபுரிந்து வருகிறார்.

பாலாஜிக்கு 30 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. இவர், தினமும் நங்கநல்லூர், வோல்டாஸ் காலனி, எஸ்.பி.ஐ காலனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து இளம் பெண்களின் முன் புல்லட் இருசக்கர வாகனத்தில் சென்று தன்னிடம் இருக்கும் ஆண் உறுப்பைக் காட்டுவது, பெண்களின் மார்பகத்தைத் தொடுவது, பின்புறத்தைத் தட்டி விட்டுச் செல்வது எனத் தொடர்ந்து பாலியல் ரீதியான அத்துமீறல்களைச் செய்து வந்துள்ளான்.

சுபஸ்ரீ இறந்தும் புத்தி வரல... சாலைகளில் மீண்டும் முளைக்கும் பேனர்கள்... கண்டுக்காத போலீஸ்!

தொடர்ந்து பெண்களிடம் அத்துமீறி அநாகரீக செயலில் ஈடுபடும் புரோகிதர் குறித்து பழவந்தாங்கல் போலீசாருக்கு பல புகார்கள் வாய்மொழியாக வந்த வண்ணம் இருந்தது. இந்த சூழலில் உளவுத்துறை போலீசாரும் இது தொடர்பாக சில விவரங்களைச் சேகரித்து சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சிவகுமாரிடம் கொடுத்துள்ளனர்.

அதனடிப்படையிலும், சிசிடிவி காட்சிகள் ஆதாரத்தின் அடிப்படையிலும் இருசக்கர வாகன எண்ணை வைத்து புரோகிதர் பாலாஜியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலாஜியை நீதிமன்ற நடுவர் முன் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி