ஆப்நகரம்

கைதியின் நாயை தத்தெடுத்த காவல்துறையினர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கைதி ஒருவருக்கு சொந்தமான நாயை காவல்துறையினர் தத்தெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 5 Oct 2018, 11:50 am
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கைதி ஒருவருக்கு சொந்தமான நாயை காவல்துறையினர் தத்தெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil dog


சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர், காஞ்சிபுரம் கிராமத்தில் உள்ள கைதியை பிடிப்பதற்காக பிடிவாரண்டுடன் அவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அவரை கைது செய்தபின், வாகனத்தில் கொண்டு சென்றபோது, கைதி வளர்த்த நாய் வாகனத்தை பின் தொடர்ந்து வந்துள்ளது.அதிக நேரம் நாய் பின்தொடர்ந்ததால், காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தி உள்ளனர். இதையடுத்து அந்தநாய் உடனடியாக வாகனத்துக்குள் ஏறி கைதிக்கு அருகில் உட்கார்ந்துகொண்டது. அந்த நாயின் அன்பை பார்த்து நெகிழ்ந்த காவல்துறையினர் அதை தாங்களே வளர்க்க முன்வந்தனர்.

இதுகுறித்து பள்ளிக்கரணை காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘’ குற்றம் செய்தது நாயின் உரிமையாளர்தான். அதற்கு பாவம் அந்த நாய் என்ன செய்யும்.அந்த நாய்மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது.நாங்கள் அதற்கு பாண்டி என்று பெயர் வைத்து நன்றாக பராமரித்து வருகிறோம். எங்கள் பணத்தில் அதற்கு பிரியாணி மற்றும் சத்தான உணவுகளை வாங்கி தருகிறோம். என்று தெரிவித்தார்.

மேலும் பள்ளிக்கரணை காவல்நிலையத்தின் ஒரு அங்கமாக அந்த நாய் மாறிவிட்டது’ என்றும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி