ஆப்நகரம்

கடந்த ஆட்சியெல்லாம் சும்மா; திமுக அரசுக்கு விவரம் ஜாஸ்தி!

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியானது தமிழகத்தில் உள்ள தாய்மார்களை மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பிறக்க கூடிய சிசுக்களை கூட நலமுடன் பாதுகாக்கும் விதமாக உள்ளதாக திமுக எம்எல்ஏ பரந்தாமன் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் கடந்த ஆட்சி போல இல்லாமல் விவரம் அறிந்த அரசாக திமுக அரசு விளங்கும் என்றும் கூறி உள்ளார்.

Samayam Tamil 20 Sep 2021, 6:44 pm

ஹைலைட்ஸ்:

  • கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
  • அறுசுவை உணவு அரசு சார்பாக ஏற்பாடு
  • தெரியாத அரசாங்கமாக திமுக இருக்காது


ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பரந்தாமன் தலைமையில் சேத்துப்பட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலந்துகொண்ட பிறகு எழும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பரந்தாமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வர் அறிவுறுத்தல்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆலோசனைப்படி எழும்பூரில் 3 வட்டங்களுக்கு உட்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

அறுசுவை உணவு அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல வகைகள் எல்லாம் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.

இந்த அரசு தாய்மார்களை மட்டுமல்ல எதிர்காலத்தில் தமிழகத்தில் பிறக்க கூடிய சிசுக்களை கூட நலமுடன் பாதுகாக்கும். அதுமட்டுமல்லாமல் உணவு கண்காட்சியும் இங்கு நடத்தப்படுகிறது.

நகை கடன் தள்ளுபடி; அமைச்சர் அதிர்ச்சி தகவல்!

கடந்த ஆட்சியில் இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகிறபோது அவர்களுக்கு கண்ணுக்கு தெரியாமல் போன 'சுபாஷன் திவாஸ்' மற்றும் 'அன்ன பிரசன்ன திவாஸ்' ஆகிய ஆகிய சொற்களுக்கு இணையான தமிழ் சொல்லை அரசின் சார்பாக வைத்து இந்த கண்காட்சியில் இடம்பெற செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பேன்.

கே.சி.வீரமணி மூக்கு கண்ணாடி ரசீது; சிரிப்பாய் சிரிக்கும்..சமூக வலைதளம்!

பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பது பற்றி எனக்கு தெரியாது. நிதியமைச்சர் அதற்கான உரிய விளக்கத்தை கொடுத்திருப்பார். நீட் தேர்வுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

பள்ளி மாணவர்களை தொற்று பாதிக்காது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் புது குண்டு!

நீட் தேர்வுக்கு எதிராக தேர்தல் வாக்குறுதி கொடுத்தோம். அதற்காக மசோதாவை நிறைவேற்றி இருக்கிறோம். அதை ஆளுநரின் ஒப்புதலுக்கும் அனுப்பி உள்ளோம். கடந்த அரசு போல் நீட் தொடர்பான வாக்குறுதிகள் எங்கே போனது என்று தெரியாத அரசாங்கமாக திமுக அரசு இருக்காது. இவ்வாறு பரந்தாமன் எம்எல்ஏ கூறினார்.

அடுத்த செய்தி