தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்வுகள் கடந்த மாதம் 3-ம் தேதியுடன் நிறைவடைந்தன. மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 33 ஆயிரம் மாணவிகளும், 4 லட்சத்து 16 ஆயிரம் மாணவிகளும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.
இந்நிலையில், சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலையில் வெளியிட்டார். தமிழ்நாடு முழுவதும் தேர்வு எழுதியவர்களில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை தேர்ச்சி விகிதம்
சென்னையில் இருந்து மொத்தமாக 5 ஆயிரத்து 899 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில், 5 ஆயிரத்து 124 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 86.86 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட சற்று அதிகம். கடந்த ஆண்டு சென்னையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 86.47 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
புலியூரில் உள்ள சென்னை உயர்நிலை பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை கொடுத்துள்ளது. 71 மாணவர்கள் சென்டம் வாங்கி அசத்தியுள்ளனர். பாடவாரியாக முழு மதிப்பின் வாங்கிய விவரங்கள் பின்வருமாறு,
இதேபோல், 42 மாணவர்கள் 99 சதவீதம் மதிப்பெண்களை பெற்று சாதித்துள்ளனர்.
அசத்திய மாணவர்கள்
மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் மொத்தமாக 86.87% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் 88.47% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக சென்னையை பொருத்தவரை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதேபோல், சென்டம் வாங்கியவர்கள், 99% வாங்கியவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்நிலையில், சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலையில் வெளியிட்டார். தமிழ்நாடு முழுவதும் தேர்வு எழுதியவர்களில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை தேர்ச்சி விகிதம்
சென்னையில் இருந்து மொத்தமாக 5 ஆயிரத்து 899 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில், 5 ஆயிரத்து 124 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 86.86 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட சற்று அதிகம். கடந்த ஆண்டு சென்னையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 86.47 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
புலியூரில் உள்ள சென்னை உயர்நிலை பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை கொடுத்துள்ளது. 71 மாணவர்கள் சென்டம் வாங்கி அசத்தியுள்ளனர். பாடவாரியாக முழு மதிப்பின் வாங்கிய விவரங்கள் பின்வருமாறு,
- வேதியியல் - 1
- தாவரவியல் - 1
- கணக்கு புள்ளியியல் - 2
- வரலாறு - 1
- புவியியல் - 2
- பொருளாதாரம் - 7
- வணிகவியல் - 20
- அக்கவுண்டன்சி - 25
- கணினி அறிவியல் - 3
- கணினி பயன்பாடு - 9
இதேபோல், 42 மாணவர்கள் 99 சதவீதம் மதிப்பெண்களை பெற்று சாதித்துள்ளனர்.
அசத்திய மாணவர்கள்
- 551 - 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் - 52 (கடந்த ஆண்டு 47)
- 501 - 550 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் - 254 (கடந்த ஆண்டு 164)
- 450 - 500 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் - 456 ( கடந்த ஆண்டு 323)
மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் மொத்தமாக 86.87% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் 88.47% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக சென்னையை பொருத்தவரை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதேபோல், சென்டம் வாங்கியவர்கள், 99% வாங்கியவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.